தெய்வம் வளர்த்ததமிழ் தென்பொதிகை தோன்றுதமிழ்
உய்வை உலகினுக்கு ஊட்டுதமிழ் - மெய்யுணர்வில்
தன்னே ரிலாததமிழ் துங்கமுடன் மின்னிணையம்
மின்னவந்த மேன்மைத் தமிழ்.

 * தமிழ் திருமுறை திருமணத்தின் தனிச்சிறப்புகள் * ----------* The Special features of Tamil Thirumurai Thirumanam*


தமிழ் வழிபாட்டு வெற்றி விழா


பேரன்புடையீர்!

இலண்டன் உலக சைவத் தமிழ்ப் பேரவையும் சொர்ணபூமி எனப்படும் சுவிட்சர்லாந்து நாட்டின் சைவநெறிக்கூடமும் இணைந்து பேர்ண் நகரில் நடத்திய உலக சைவ மாநாட்டில் கலந்து கொண்ட ஐரோப்பிய நாடுகள், ஐக்கிய பிரிட்டன் நாடுகள், அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளின் தமிழ்க்கோயில்கள் அறங்காவலர்கள் அனைவரும் 16-9-2012 - ஆம் நாள் செந்தமிழ் வேள்விச் சதுரர் மு.பெ.சத்தியவேல் முருகனார் தலைமையில் கூடி, உலகெங்கணும் உள்ள சைவத் தமிழ்த் திருக்கோயில்களில் இனி கருவறையில் தமிழ் வழிபாடே ஒலிக்க வேண்டும் என்று உறுதி பூண்டு உலகப் பிரகடனம் செய்துள்ளார்கள். தமிழ் வழிபாட்டிற்குக் கிடைத்துள்ள இந்த வரலாற்று வெற்றியை இங்கே தமிழகத்திலும் கொண்டாட தெய்வத்தமிழ் அறக்கட்டளையும், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராயமும் இணைந்து தமிழ் வழிபாட்டு வெற்றி விழா இங்கே எடுக்கிறது. இவ்விழாவில் மிக முக்கியமான தமிழ் வழிபாட்டுத் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட இருக்கின்றன. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த விழாவின் நிகழ்ச்சி நிரல்


இவ்விழாவில் திரளாக தமிழ் அறிஞர்களும், அருட்சுனைஞர் பட்டயப் படிப்பு பயிற்சி பெற்ற மாணவர்களும் கலந்து கொள்கிறார்கள்.


இடம் : எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக கலைக்கூடம். எண் 1, ஜவகர்லால் நேரு சாலை, (100 அடி சாலை), வடபழனி சந்திப்பு அருகில், சென்னை - 600 026.

நாள் : 14-10-2012; ஞாயிறு காலை 9.30 மணி அளவில்.



தமிழ் வழிபாட்டு வெற்றி விழா - அழைப்பிதழ் பதிவிறக்கம் செய்ய




அனைவரும் வருக! தமிழ்நலம் பெறுக!!

இறைவணக்கம் : திருமதி. வள்ளி உமாபதி

வரவேற்புரை : சித்தாந்த ரத்தினம் பழ.முருகேசன், தெய்வத்தமிழ் அறக்கட்டளை.

தலைமை : முனைவர் மு.பொன்னவைக்கோ, துணைவேந்தர்/எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகம்.

சிறப்புரை : திரு.V.V.சுவாமிநாதன், மேனாள் அறநிலையத்துறை அமைச்சர்.

திரு. ப. வாசு,
தலைவர் /கோவில் பூசாரிகள் நலச்சங்கம் - தமிழ்நாடு.

திரு. சி. தங்கர்பச்சான், திரைப்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்.

முனைவர் இரா.சென்னியப்பனார், தலைவர்/மணிவாசகர் அருட்பணிமன்றம்.

திரு. V.சேகர், திரைப்பட இயக்குநர்/திருவள்ளுவர் கலைக்கூடம்.

திரு. S. செந்தில்நாதன், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்.

திரு. குமரன், வழக்கறிஞர்/அருட்பெருஞ்சோதி இயக்க நிறுவனர்.

திரு. பா.சீனிவாஸ், பதிப்பாசிரியர்/தெய்வமுரசு.

நிறைவுரை மற்றும் தீர்மானங்கள் : செந்தமிழ் வேள்விச்சதுரர் மு.பெ.சத்தியவேல் முருகனார்

தொகுப்புரை : திரு. G.S.வேங்கடபிரகாஷ், செய்தியாளர்/புதிய தலைமுறை தொலைக்காட்சி.

சித்தாந்த ரத்தினம் திரு.S.திருச்சுடர்நம்பி, தெய்வத்தமிழ் அறக்கட்டளை.

நன்றியுரை: முனைவர் திரு. ஜே. ஜெகத்ரட்சகன், பொறுப்பாசிரியர்,சமயக் கல்வி துறை/ தமிழ்ப்பேராயம் / எஸ்.ஆர்.எம்.